திருமணம் முடிந்த பெண்ணிற்கு துண்டு சீட்டு ஐ லவ் யூ... வாயால் கேட்ட தம்பதியை தட்டி அனுப்பிய அம்மா - மகன்..!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அ.வல்லாளப்பட்டி பகுதியை சார்ந்தவர் போஸ். இவரது மனைவியின் பெயர் இலக்கியா (வயது 29). இலக்கியா, தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் முருகன் (வயது 33) என்பவரிடம் சகோதரத்துவத்துடன் பேசி வந்துள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று இலக்கியா இரவு நேரத்தில் தனது இல்லத்தில் இருந்து கொண்டு இருக்கும் போது, முருகன் துண்டு சீட்டில் தனது அலைபேசி எண்ணுடன் " ஐ லவ் யூ " என்று எழுதி ஜன்னலின் வழியாக வீட்டிற்குள் போட்டுள்ளான்..

இதனைக்கண்ட இலக்கியாவுடைய கணவர் அதிர்ச்சியடைந்து, முருகனை அழைத்து தட்டிக்கேட்டுள்ளார். இந்த நேரத்தில், முருகனின் தாயார் தனது மகனிற்கு ஆதரவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதன் காரணமாக இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறி போஸ் மற்றும் இலக்கியாவை முருகனின் தரப்பினர் தாக்கியுள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக இலக்கியா அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கணவன் மற்றும் மனைவியை தாக்கிய முருகன் மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai love torture couple attacked by mom and son


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->