மல்லிகை பூவின் விலையிலேயே மயங்கிய இல்லத்தரசிகள்..!! - Seithipunal
Seithipunal


மல்லிகை பூ. இந்த பூவை நமது தமிழ் பெண்கள் தலையில் வைத்து., அலங்காரமாக ஜோடித்து., கூந்தல் முழுவதும் மல்லிகை பூவை சூடி., நெற்றியில் திலகம் இட்டு., பாரம்பரிய ஆடை அணிந்து நடந்து வரும் போது பெண் தெய்வங்களே வந்தார் போல இருக்கும்.

இந்த மல்லிகை பூவானது நல்ல நறுமணத்தையும்., மருத்துவத்திற்கும் அதிகளவில் பயன்படுகிறது. இந்த மல்லிகையானது இந்தியா., இலங்கை., தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளில் அதிகளவு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. 

malligai, malligai poo, jasmine flower, jasmine,

இந்த மல்லிகையானது மதுரையில் இருந்து அதிகளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிகளவில் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகையின் விளைச்சல் அதிகளவில் உள்ளதால்., மதுரையை மல்லி நகரம் என்று அழைப்பார்கள். இந்தநிலையில்., மல்லிகைப்பூவின் விலையானது அவ்வப்போது அதிகரித்து இருப்பது அந்தந்த நாட்களின் சுப தினங்களை பொறுத்து இருக்கும். 

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மல்லிகை பூவின் வரத்து குறைந்துள்ளதால் விலையானது சற்று அதிகரித்துள்ளது. மேலும்., இன்றைய தினம் சுப தினம் என்பதாலும் மல்லிகை பூவானது விலை அதிகமாக இருந்தது. இதனையடுத்து மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai jasmine flower price is high


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->