கள்ளக்காதல் வைத்திருந்த கணவனை, இரத்த வெள்ளத்தில் துடிக்கவிட்டு போட்டுத்தள்ளிய மனைவி.! மதுரையில் பகீர்.!!
in Madurai husband killed by wife due to illegal affair
மதுரை மாவட்டத்திலுள்ள சீட்டாலாட்சி நகர் பகுதியை சார்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது மனைவியின் பெயர் சுபா. ரஞ்சித் குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில்., ரஞ்சித்குமாருக்கும் - சுபாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஒரு சமயத்தில் விரக்தி அடைந்த இருவரும்., பிரிந்து வாழ முடிவு செய்து இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த தருணத்தில்., ரஞ்சித்குமாருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக தெரியவருகிறது.
மனைவியை விட்டு பிரிந்து சென்ற ரஞ்சித்குமார்., மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை அறிந்த சுபா., தனது கணவரின் மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து தனது கணவரை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
கணவரை கொலை செய்ய தனது ஆண் நண்பர்கள் மூலமாக திட்டம் தீட்டியதை அடுத்து., ரஞ்சித்குமார் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து., வீட்டிற்குள் சென்ற கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்து., அவரது பிறப்புறுப்பை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த ரஞ்சித் ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த நிலையில்., அவரின் அலறல் கேட்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களின் வருகை கொண்ட மர்ம கும்பல் சம்பவ இடத்தில இருந்து தப்பி ஓடியதை அடுத்து., அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும்., இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருந்த ரஞ்சித் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
மேலும் இந்த விஷயம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு., ரஞ்சித்குமாரின் மனைவி சுபா மற்றும் கொலை செய்த அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Madurai husband killed by wife due to illegal affair