தனியார் காப்பகத்தில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரன்கள்..! மதுரையில் பரபரப்பு...!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் பல விதமான பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறான பிரச்சனைகளில் நம்மை பெரும் துயருக்கு உள்ளாக்குவது பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் தான். இவரது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறைக்க., சட்டதிட்டங்கள் கடுமையாக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகமானது செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் சுமார் 25 க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமிகள் தங்கியுள்ளார். இந்த காப்பகத்தை அங்குள்ள கருமாத்தூரை சார்ந்த ஞானப்பிரகாசம் மற்றும் ஆதிசிவன் (வயது 41) என்ற இரு காம கொடூரன்கள் நடத்தி வருகின்றனர். 

madurai, madurai railway station, madurai city, மதுரை, மதுரை ரயில் நிலையம், ரயில் நிலையம்,

இவன்கள் காப்பகத்தில்  இருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்குவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தது. இதனையடுத்து இது தொடர்பான புகாரும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை நடத்தினர். மேலும்., சிறுமிகள் - சிறுவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., காப்பகத்தில் இருந்த நான்கு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகள்., தங்களுக்கு நடந்த கொடூரத்தை கூறி கதறியழுதனர். இதனை கேட்டு அதிர்ச்சியான அதிகாரிகள் சிறுமிகளை மீட்டு அங்குள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்து., சிறுவர்களையும் வேறு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். 

பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், sexual harassment, sexual abuse, harassment,

மேலும்., காப்பகத்தை நடத்தி வந்த காம கொடூரன் ஆதிசிவன் சிறுமிகளை பல முறை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும்., இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இந்த கொடூரம் அனைத்தும் காப்பகத்தின் அலுவலகத்திலேயே நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இரண்டு காம கொடூரன்களை கைது செய்த காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai girls rapped by hostel owner police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->