நண்பருடன் சென்ற சிறுமியை சீரழித்த கொள்ளையன்.! மதுரையில் அரங்கேறிய கொடூர சம்பவம்.!!
in madurai girl sexual harassment by thief
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள பகுதியில் சிறிய மலைப்பகுதியானது அமைந்துள்ளது. இந்த மலைக்கு செல்ல இரண்டு பாதைகள் உள்ளது. இந்த கோவிலுக்கு தார் சாலையில் செல்ல தூரம் அதிகம் என்பதால்., நடந்து வரும் பயணிகள் மலைப்பாதை வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்த வழியாக செல்லும் சமயத்தில் அடர்வனப்பகுதியும் அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதியின் வழியாக சுமார் 17 வயதுடைய சிறுமியொருவர் அவருடைய நண்பருடன் சென்று கொண்டு இருந்த நிலையில்., இவர்கள் இருவரும் அடர்ந்த வனப்பகுதியில் உல்லசமாக இருந்துள்ளனர். இந்த விஷயத்தை அங்கிருந்த கொள்ளையன் ஒருவன் கண்டுள்ளான்.
இதனையடுத்து இவர்களை கண்ட அவன்., இவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்ட நிலையில்., சிறுமியை அவனுடன் வைத்துக்கொண்டு., அவரது நண்பனை அடித்து துரத்தியுள்ளான்.
இதற்கு பின்னர் சிறுமியை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு உள்ளே அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த நிலையில்., பதறிப்போன இளைஞர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் காவல் துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., சிறுமியை சீரழித்த இளைஞரை கைது செய்துள்ளனர். இந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில்., இவன் மதுரை மேலூரை சார்ந்த தர்சன் என்பது தெரியவந்தது.
இதுமட்டுமல்லாது இவன் இதனைப்போன்ற குற்றங்களை தொடர்ந்து செய்து வந்த நிலையில்., இங்கு வரும் ஜோடிகள் இளம் வயது மற்றும் காதலர்கள் என்ற காரணத்தால் யாரும் புகாரளிக்க முன்வராமல் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in madurai girl sexual harassment by thief