சிறுமியை நான்கு வருடமாக சீரழித்து இரண்டு குழந்தைக்கு தாயாக்கிய காம கொடூரன்கள்.! மதுரையில் பேரதிர்ச்சி.!!
in Madurai girl rapped last four years a got two child shocking news
நாம் வாழும் உலகில் பல விதமான கொடூர மற்றும் துயர சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனைகளுள் நம்மை நிகழ்விற்கு ஆத்திரத்தை உண்டாக்குவது., பெண்கள் மீதான அநீதிகள் ஆகும். பெண்கள் என்னதான் வளர்ந்தாலும் நமக்கு குழந்தைகளாவே இருப்பதால்., பெண்கள் மீது எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் அநீதிக்கும் நமது மனம் பதறுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் உள்ளது வாஞ்சிநாதன் நகர். இதே தெருவில் சிறுமி ஒருவர் வசித்து வந்துகொண்டு இருந்தார். இந்த சிறுமியை நயவஞ்சகமாக ஏமாற்றி விஜயகுமார் மற்றும் வேலுசாமி என்ற இரண்டு காம கொடூரன்கள் பலாத்காரம் செய்து வந்துள்ளான்கள். இந்த கொடூர துயரத்தை தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளான்கள்.
Tamil online news Today News in Tamil
இந்த நிலையில்., கடந்த 2015 ஆம் வருடத்தில் இவன்களது கொடூரத்தின் காரணமாக சிறுமி இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில்., இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளான்கள். இந்த கொடூரமானது தொடர்ந்து அரங்கேறி வந்துள்ளது..
இதுமட்டுமல்லாது இவன்களது காம இச்சைக்காகவே சிறுமியை சீரழித்து வந்த நிலையில்., சிறுமியின் பள்ளி பருவ வாழக்கையையும் சீரழித்து., குழந்தை பெற்றெடுக்கும் வரை கொடுமை செய்து வந்துள்ளான்கள். இந்த சம்பவமானது வெளியே தெரியவந்த நிலையில்., இது குறித்த தகவல் காவல் துறையினருக்கு கிடைக்க வந்துள்ளது.
இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமி மற்றும் குழந்தைகளை காப்பாற்றிய நிலையில்., குழந்தைகளை தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் அரசிடம் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை அரசு காப்பகத்தில் சேர்த்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்த வழக்குப்பதிவு தகவலை அறிந்த விஜயகுமார் தலைமறைவாகவே., சிக்கிய வேலுசாமியிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் சோகத்தையும்., ஆத்திரத்தையும் தமிழக மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Madurai girl rapped last four years a got two child shocking news