10 வருட பகை.. கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்.. கரோனாவுக்கு பயந்து சொந்த ஊர் வந்தால் விடுவோமா?.. உறவினர்கள் பரபரப்பு சம்பவம்.!!
In Madurai girl murder due to illegal affair
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் வாகைக்குளம் பகுதியை சார்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவியின் பெயர் செல்வி. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், செல்விக்கு இக்கிராமத்தை சார்ந்த முருகன் என்பவருடன் பழக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் பின்னாளில் கருப்பசாமிக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவரை பிரிந்த செல்வி, கடந்த 10 வருடத்திற்கு முன்னதாக கள்ளக்காதலனுடன் திருப்பூருக்கு சென்று வசித்து வந்துள்ளார். மேலும், முருகனும் ஏற்கனவே திருமணம் முடிந்தவர் ஆவார்.
மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக கருப்பசாமி இறக்கவே, கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 17 ஆம் தேதியன்று முருகனும், செல்விக்கும் வாகைகுளத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் உறங்கிக்கொண்டு இருந்த செல்வி மற்றும் முருகனை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கவே, செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், முருகனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த விசாரணையில் செல்வியின் சித்தி மகன் அருண்குமார் உட்பட இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In Madurai girl murder due to illegal affair