குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கள்ளக்காதலி..! மதுரையில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி வடக்குத்தெரு பகுதியை சார்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகனின் பெயர் வெயில் முத்து (வயது 21). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்., அதே பகுதியை சார்ந்த காளீஸ்வரி (வயது 29) என்ற பெண் கணவரை இழந்து வசித்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்த நேரத்தில்., காளீஸ்வரிக்கும் - வெயில்முத்துவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுமட்டுமல்லாது வெயில்முத்து தனது இல்லத்திற்கு செல்லாமல்., காளீஸ்வரியின் இல்லத்திலேயே இருந்து கணவன் - மனைவியாக திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர். 

illegal affair, couple enjoy, affair,

Tamil online news Today News in Tamil

வெயில்முத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால்., அடிக்கடி மது அருந்திவிட்டு காளீஸ்வரியிடம் தகராறு செய்து வரும் வழக்கத்தை வைத்துள்ளார். இந்த நிலையில்., வழக்கம் போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு காளீஸ்வரியை அவதூறாக பேசிய நிலையில்., அடித்தும் துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில்., கடந்த 17 ஆம் தேதியன்று அதிக போதையில் வந்த வெயில்முத்துவிற்கும் - காளீஸ்வரியிருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த பிரச்சனையில் இருவரும் ஒருவருக்கொருவரை தாக்கி தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதை அடுத்து., போதையில் வெயில்முத்து தவறி விழுந்ததால்., தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்., சம்பவ இடத்திலேயே துடிதுடித்து வெயில்முத்து உயிரிழந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காளீஸ்வரி செய்வதறியாது நள்ளிரவு வரை காத்திருந்த நிலையில்., வெயில்முத்துவின் உடலில் மண்ணெண்ய்யை ஊற்றி எரித்துள்ளார். 

died, murder, killed, suicide attempt,

சரிவர உடல் எரியவில்லை என்பதால் வீட்டின் முன்புறம் இருக்கும் இடத்தில் குழி தோண்டி வெயில்முத்துவின் உடலை புதைத்துள்ளார். இந்த சமயத்தில்., அதிகாலை நேரத்தில் அதிகளவு துர்நாற்றம் வீசியதால்., சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து விசாரித்துள்ளனர். இந்த நேரத்தில்., இவர்கள் உண்மையை கண்டறிந்து விடுவார்களோ என்ற பயத்தில் காளீஸ்வரி அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். 

பின்னர் அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., இந்த தகவலானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றிய நிலையில்., வெயில்முத்துவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில் உடலை பெற்று சென்றனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai girl killed her illegal affair friend due to family problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->