மதுரையில் 14 வயது சிறுமியை நாடககாதலால்., எரித்து கொலை செய்த வழக்கில்., நீதிபதியின் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


பெண் பிள்ளைகள் மீதான வன்மம் என்று தான் தீருமோ?..... நாடகக்காதல்., பாலியல் தொல்லை., வரதட்சனை கொடுமை என்று பல விதமான தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகி., அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதை நினைத்தாலே உள்ளம் பதறுகிறது.... 

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அருகேயுள்ள நாட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தவன் பாலமுருகன் (வயது 28). இவன் அங்குள்ள ஆலையில் கூலித தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., அதே பகுதியை சார்ந்த 14 வயதுடைய சிறுமியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளான். இந்த தருணத்தில்., சிறுமியிடம் பல முறை தனது நாடக காதலை வெளிப்படுத்தியுள்ளான். 

drama love, நாடக காதல்,

இவனது காதல் வலையில் விழாமல் இருந்த சிறுமி., இவனது காதலை ஏற்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். சிறுமி மறுப்பு தெரிவித்தாலும்., தொடர்ந்து பல முறை வற்புறுத்தி வந்துள்ளான். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி., இது குறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில்., இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்குப்பதிவால் சிறையில் இருந்த பாலமுருகன்., கடந்த 2018 ஆம் வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் ஜாமினில் வெளிவந்த நிலையில்., தன்னை சிறைக்கு அனுப்பிய சிறுமியை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளான். 

fire,

இதனையடுத்து பள்ளியின் வாயிலில் சிறுமியின் வருகைக்காக காத்திருந்த கொடூரன்., சிறுமியை சந்தித்து "எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கவேகூடாது" என்று கூறி., மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளான். இதனை எதிர்பார்க்காத சிறுமி உடலில் தீப்பற்றி கருகிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

பின்னர் இந்த தகவலை அறிந்த காவல் துறையினர்., பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட மகளீர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., பலமுருகனுக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்த நிலையில்., தற்போது ஆயுள் தண்டனை விதித்தும்., ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai girl killed by drama lover case court order jail


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->