சிலிண்டரை வெடிக்க செய்து உயிரை மாய்த்த தந்தை - மகள் விவகாரத்தில்., காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் உசிலம்பட்டி அருகேயுள்ள தொட்டப்பநாயக்கனூர் பகுதியை சார்ந்தவர் கருப்பையா. இவரது மனைவியின் பெயர் கீதா. இவர்கள் இருவருக்கும் பிரதீபா மற்றும் ஹேமலதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கருப்பையா அங்குள்ள பகுதியில் தேநீர் கடை நடத்தி வந்தும்., பெட்ரோல் பங்கில் பணியாற்றும் வந்துள்ளார். 

இந்த தருணத்தில்., நேற்று இவரின் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கருப்பையா மற்றும் இவரது இரண்டு மகள்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவலானது வெளிவந்தது. இந்த விசாரணையில்., கருப்பையாவின் மனைவியான கீதாவிற்கும் - இதே பகுதியை சார்ந்த ஆனந்த் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதனால் கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., இவர்களின் முறையற்ற உறவானது கருப்பையாவிற்கு தெரியவந்துள்ளது. இந்த கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ளாத கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., இதனால் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த தகராறு கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக ஏற்பட்ட நிலையில்., ஆத்திரமடைந்த கீதா தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுவிடவே., கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததை அடுத்து தற்கொலை முடிவை எடுத்துள்ளதால்., தனது குழந்தைகளுக்கு யார் துணை இருக்கிறார்கள் என்றும் எண்ணியுள்ளார். மேலும்., தாயிடம் குழந்தைகள் இருந்தால் அதன் எதிர்காலத்தை நினைத்தும் வருந்தியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலை அடுத்து மனதை கல்லாக்கிக்கொண்டு., தனது மகளை மதியம் பள்ளியில் இருந்து அழைத்து வந்து., கடையில் ஆட்கள் இல்லாத சமயத்தில் சிலிண்டரை பற்றவைத்து மூவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது தற்போது தெரியவந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தகவல் முதற்கட்ட விசாரணையில் வெளியான நிலையில்., இந்த வழக்கை விசாரித்த காவல் துறை அதிகாரி "மனைவியின் கள்ளக்காதல் உறவு கைவிட மறுப்பு தெரிவிக்கப்பட்டதால்., மனவேதனையில் இருந்த கணவர் குழந்தையுடன் தற்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சுமார் 7 பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில்., கீதா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ளோம் என்றும்., இது குறித்த விசாரணை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai family attempt suicide police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->