கள்ளக்காதல் மோகத்திற்காக குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்த கொடூர தாய்..! மூன்று வருடங்களுக்கு பின்னர் வெளியான பேரதிர்ச்சி..!!
in Madurai child killed due to illegal affair my mother
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரை அடுத்துள்ள பகுதியை சார்ந்தவர் ராகவனத்தம். இவரது மனைவியின் பெயர் ரஞ்சிதா. இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். ராகவனத்தம் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில்., இவரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் மேலூரில் உள்ள பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில்., கடந்த 2016 ஆம் வருடத்தின் போது வீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகளான பார்கவி மற்றும் யுவராஜா ஆகிய இருவரும் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்த நேரத்தில்., வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்ததாக உறவினர்களிடம் கூறி நம்பவைத்து ஏமாற்றியுள்ளார்.
இந்த தருணத்தில்., அதே பகுதியில் கல்யாணகுமார் என்பவன் வசித்து வந்துள்ளான். கல்யாண குமாருக்கும் - ரஞ்சிதாவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். வெளிநாட்டில் பணியாற்றி வந்த ராகவனத்ததிற்கு இந்த தகவல் தெரியவரவே., குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து காவல் நிலையத்தில் ராகவனத்தம் புகார் அளித்த நிலையில்., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த தகவல் 3 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Madurai child killed due to illegal affair my mother