மதுபோதையில் தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன் அடுத்து செய்த காரியம்..! பதறிப்போன காவல்துறை.!!
In madurai brother killed police investigation going on
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் இருக்கும் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள விளார்சேரி பகுதியை சார்ந்தவர் பாண்டி. இவருக்கு திருமணம் முடிந்து எட்டு வயதுடைய பெண் குழந்தை உள்ள நிலையில்., கணவன் - மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மனைவி கணவரை பிரிந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில்., பாண்டி தனது மகள் மற்றும் தனது தாயார்., சகோதரர் சம்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த தருணத்தில்., சகோதரர்கள் இடையே முன் விரோதம் இருந்ததாக தெரியவருகிறது. இவர்களுக்குள் அவ்வப்போது சண்டை மற்றும் தகராறு ஏற்பட்டு வருவது வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்த சூழ்நிலையில்., பாண்டியின் மகள் வீட்டில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. இதனை சம்பத் கண்டித்துள்ள நிலையில்., இது குறித்து தாயாரிடம் தெரிவித்து திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டி சம்பத்திடம் சண்டையிடவே., சண்டைக்கு பின்னர் வெளியே சென்று மது அருந்தியுள்ளார்.
அதிக போதையில் தள்ளாடிய நிலையில் வீட்டிற்கு வந்த பாண்டி மீண்டும் சம்பத்திடம் சண்டையிடவே., இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பாண்டி சம்பத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சம்பத் சம்பவ இடத்திலேயே பரிதமபாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தான் செய்த தவறை உணர்ந்த பாண்டி அங்குள்ள திருநகர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைந்த நிலையில்., இது குறித்து தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In madurai brother killed police investigation going on