விஷ வாழைப்பழத்தை சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த காதலி.!! நேக்காக தப்பித்த நாடககாதலன்.!! கும்பகோணத்தில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகேயுள்ள நந்தவனம் கிராமத்தை சார்ந்த பெண்ணொருவர் ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். இதே பகுதியில் வசித்து வரும் தனியார் சுய உதவிக்குழுவில் பணியாற்றி வரும் பெருமாள்கோவில் கிராம பகுதியை சார்ந்தவர் கோபிநாத் ஐயப்பன். 

இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில்., ஐயப்பன் அங்குள்ள பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பயின்று வந்த நேரத்தில்., பன்னிரண்டாம் வகுப்பு பெண்ணை நாடக காதலால் வீழ்த்தியுள்ளான். இதனால் மாணவிக்கும் - ஆசிரியருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. 

love, love images,

இவர்கள் தற்போது வெவ்வேறு பணிகளை செய்து வந்தாலும்., காதலில் உறுதியாக இருந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில்., 5 வருடங்களுக்கு பின்னர் தற்போது பெண் கோபிநாத் ஐயப்பனுடன் பேசுவதை திடீரென நிறுத்தியுள்ளார். இந்த நேரத்தில்., சந்தேகம் அதிகளவு ஆட்கொள்ளவே., பெண்ணிற்கு மற்றொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக பெண்ணிடம் சந்தேகத்தை கேட்ட நிலையில்., தான் உன்னையே காதலித்து வருகிறேன்., அவன் எனக்கு சகோதரன் முறையில் உள்ளவன்., அவனும் நானும் நட்பாக பழகி வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். உண்மையை நம்பாத கோபிநாத் காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சமயத்தில்., ஆத்திரமடைந்த கொடூரன் வீட்டிற்கு சென்று விட்டுவிடுவதாக கூறியுள்ளான். 

இவனை நம்பி சென்ற பெண்ணை அழைத்து கொண்டு அங்குள்ள ரெட்டிபாளையம் பகுதியில் இருட்டான இடத்திற்கு அழைத்து சென்று., நாம் இருவரும் சேரவும் வேண்டாம்., வாழவும் வேண்டாம் என்று கூறி விஷம் கலந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு இருவரும் இறந்துவிடலாம் என்று நடித்துள்ளான். இதனை நம்பிய பெண்ணும் காதலனின் முடிவை ஏற்று பரிதாபமாக விஷம் கலந்த வாழைப்பழத்தை சாப்பிட்டுள்ளார். 

love, drama love,

மேலும்., திரைத்துறையில் நடிப்பது போல நடித்த கொடூரன் விஷம் கலக்காத வாழைப்பழத்தை சாப்பிட்டு., காதலியை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு சென்றுள்ளான். வீட்டிற்கு சென்றதும் பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்ததை அடுத்து., அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்களின் சிகிச்சை பொய்த்து பரிதாபமாக உயிரிழந்தார். மகளின் உடலை கண்ட பெற்றோர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்., மகளின் கொலைக்கு காரணமாக இருந்த நாடககாதலன் கோபிநாத்தை கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை ஏற்ற காவல் துறையினர் கோபிநாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kumbakonam girl died drama love, lover escaped safely eat poison banana


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->