இளைஞருடன் சேர்ந்து மதுவிருந்து கொண்டாட்டம்.. 3 வயது குழந்தைக்கு மதுஊற்றி அரங்கேற்றிய தாயின் கொடுமை..!!
in krishnagiri mom torture 3 year child girl when drink and enjoy with affair
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை அடுத்துள்ள பாகலூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தார் நந்தினி. இவரது மகளின் பெயர் நயனா ஸ்ரீ (வயது 3). இவருக்கும் - மாதேஷ் என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை பிரிந்து வசித்து வந்துள்ளார்.
இந்த நேரத்தில், இப்பகுதியை சார்ந்த வெல்டிங் பணி செய்து வரும் அசோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இவர்களுக்குள் காதலாக மலர்ந்து, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதிய நேரத்தில் நந்தினியின் இல்லத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் வழக்கத்திற்கு மாறாக கேட்டுள்ளது.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்து பார்க்கையில், மதுபோதையில் தள்ளாடிய நிலையில் இருந்த நந்தினி, தனது மகளுக்கு மதுவினை ஊற்றி கொடுத்து கொடுமை செய்திருந்தது தெரியவந்தது. குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர் அங்குள்ள சுகாதார மையத்தில் குழந்தையை அனுமதி செய்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சையளித்த நேரத்தில் குழந்தையிடம் இருந்து மதுவாடை வந்ததை அடுத்து, அங்குள்ள காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் ஓசூர் மகளிர் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த கல்லூரி இளைஞர் சதீஷ் உள்ளிட்ட அப்பகுதியை சார்ந்த சில இளைஞர்களுடன் நந்தினிக்கு பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், சம்பவத்தன்று மதிய நேரத்தில் நந்தினி சதீஷ் உள்ளிட்ட சில இளைஞருடன் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்த நேரத்தில், குழந்தை அழுதது அவர்களின் உல்லாசத்திற்கு இடையூறாக அமைந்துள்ளது.
இதனால் கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளான நந்தினி குழந்தையுடைய வாயில் மதுவினை ஊற்றி அடித்து கொடுமைப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் நந்தினி மற்றும் சதீஷ், அசோகன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in krishnagiri mom torture 3 year child girl when drink and enjoy with affair