உல்லாசத்திற்கு மறுப்பு தெரிவித்த கள்ளக்காதலி... 20 வயது இளைஞனின் விபரீத முடிவினால் நேர்ந்த சோகம்.!!
in krishnagiri man attempt suicide due to illegal affair
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை அருகேயுள்ள குடிசாதனப்பள்ளி கிராமத்தை சார்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவியின் பெயர் நிருபா (வயது 29). இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர்களுக்கு 6 வயதுடைய பெண் குழந்தை உள்ள நிலையில், கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்சனையானது ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
இதனால் கடும் மனவேதனைக்கு உள்ளான சீனிவாசன் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், நிருபா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். நிருபா வசித்து வரும் இப்பகுதியை சார்ந்தவரின் பெயர் பிரபாகர் (வயது 20).
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் அவ்வப்போது தனிமையில் நிருபாவின் இல்லத்தில் வைத்து சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நேரத்தில், கள்ளகாதலனின் மீது வெறுப்பை உணர்ந்த நிருபா, இனி வீட்டிற்கு வருவதையும், உல்லாசமாக இருப்பதையும் தவிர்த்து விடுமாறு கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த பிரபாகர் உல்லாசமாக இருப்பதிலேயே முனைப்பு காட்டியுள்ளார்.
இதனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பிரபாகர் நிருபாவை அறையில் வைத்து பூட்டிவிட்டு மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயத்தை அறிந்த காவல் துறையினர் பிரபாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in krishnagiri man attempt suicide due to illegal affair