மனைவியின் கள்ளகாதலால் தூக்கில் தொங்கிய கணவன்.. மகனின் மனநிலை அறிந்து, தந்தையின் வெறித்தனமான சம்பவம்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி அருகேயுள்ள பஸ்தலப்பள்ளி பகுதியை அடுத்துள்ள தொட்டேஅள்ளியை சார்ந்தவர் சீனிவாசன் (வயது 30). இவர் இங்குள்ள சப்படி பகுதியில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இங்குள்ள கொத்தூர் பகுதியை சார்ந்தவர் லட்சுமி (வயது 27). இவர்கள் இருவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் மகன் உள்ளார். 

இந்த நேரத்தில், தொட்டேஅள்ளி பகுதியை சார்ந்த கட்டிட தொழிலாளியான முரளி (வயது 35) என்பவருக்கு, சீனிவாசனின் மனைவியான லட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இவர்களின் உல்லாச வாழ்க்கையை சீனிவாசன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக நேரில் கண்டுள்ளார். இதனால் விரக்தியான மனநிலையில் சீனிவாசன் இருந்து வந்துள்ளார். 

ஒரு சமயத்திற்கு மேல் மனதிற்குள்ளேயே வைத்து வெம்பிக்கொண்டு இருந்த சீனிவாசன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை விவகாரம் தொடர்பாக சூளகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த தருணத்தில், அங்குள்ள தொட்டேஹல்லி அருகே முரளி பலத்த காயத்துடன் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர், முரளியின் உடலை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சீனிவாசனின் தந்தை முரளியை தான் அடித்து கொலை செய்ததாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், முரளி எனது மருமகள் லட்சுமியுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்தார். இந்த விஷயத்தை அறிந்த எனது மகன் இருவரையும் பலமுறை கண்டித்தும் பலனில்லாததால், மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். 

இதன்பின்னர் லட்சுமி அவரது தாயாரின் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், அங்கு சென்றும் லட்சுமியை முரளி தொந்தரவு செய்து வந்துள்ளான். இந்த சமயத்தில், நேற்று முன்தினம் லட்சுமியை காண முரளி வந்த நிலையில், இதனை கண்ட நான் முரளியை கண்டித்தேன். 

இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, இது தகராறாக மாறியது. கடுமையான ஆத்திரமடைந்த நான் முரளியை கட்டையை கொண்டு அடித்து கொலை செய்தேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து சீனிவாசனின் தந்தை பர்சப்பாவின் மீது வழக்குப்பதிவு செய்து, சேலம் சிறையில் காவல் துறையினர் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in krishnagiri illegal affair murder police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->