கணவன் கடன் கொடுத்தவனுக்கு கைகொடுத்து கரம்கோர்த்த மனைவி..!! இறுதியில் அரங்கேறிய பெரும் துயரம்..!!
in krishnagiri illegal affair end killed husband
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவரது முதல் மனைவி - இவருடன் இருந்த குடும்ப பிரச்சனையின் காரணமாக பிரிந்து சென்றுள்ளார். பின்னர் இரண்டாவதாக விஜயாம்மா என்பவரை திருமணம் செய்து., தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து குழந்தையில்லாததால்., இருவரும் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., ஈஸ்வரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால்., தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சமயத்தில்., இதே பகுதியை சார்ந்த இளைஞரொருரவர் ரூ.5 இலட்சம் கடனாக வழங்கியுள்ளார். கடனை அவ்வப்போது கழிக்க வந்த வாலிபருடன்., விஜயம்மாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த கள்ளகாதல் விவகாரத்தை அறிந்த ஈஸ்வரன் வாலிபரிடம் பணத்தை திரும்பி கேட்ட நிலையில்., மதுஅருந்திவிட்டு மனைவியையும் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடிகள் ஈஸ்வரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இவர்களின் திட்டப்படி கடந்த 20 ஆம் தேதி., விஜயம்மாவின் கள்ளக்காதலன் ஈஸ்வரனிற்கு பணம் தருவதாக கூறி அழைத்து சென்று மது வாங்கி கொடுத்துள்ளான். பின்னர் ஈஸ்வரன் மது அருந்திய நிலையில்., போதை அதிகளவு ஏறியுள்ளது. இதனை அறிந்த கள்ளக்காதல் ஜோடிகள் ஈஸ்வரனின் தலையில் கல்லை கொண்டு அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அடையாளத்தை மறைக்க முகத்தை சிதைத்து., ஆந்திர வனப்பகுதியில் பிணத்தை கொண்டு போட்டுள்ளனர்.
பிணத்தை அப்புறப்படுத்திய இருவரும் எந்த விதமான சந்தேகமும் இல்லாதவாறு ஊருக்கு வந்து நடந்துகொண்ட சூழ்நிலையில்., ஈஸ்வரனின் உறவினர்கள் ஈஸ்வரன் காணவில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சமயத்தில்., ஆந்திர காவல் துறையினர் ஈஸ்வரனின் உடலை மீட்டு வைத்திருந்த நிலையில்., இறந்தவர் ஈஸ்வரன் என்பதை காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in krishnagiri illegal affair end killed husband