10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த பள்ளி தாளாளர்.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் சாந்திநிகேதன் பள்ளியில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ் கையெழுத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுவது வழக்கம். 

இந்த கையெழுத்து பயிற்சிக்கு தனது 10 வயது மகளை அழைத்து வந்த தந்தை., சிறுமியை வகுப்பறையில் அமரவைத்துவிட்டு அங்கிருக்கும் ஜோதிட வகுப்பிற்கு சென்ற நிலையில்., இந்த சந்தர்ப்பத்தை தாளாளர் பயன்படுத்திக்கொள்ள நினைத்துள்ளான்..

60 வயதாகும் தாளாளர் குருதத் சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று புத்தகம் கொடுப்பதாக கூறியுள்ளான். இவனது பேச்சில் உள்ள விபரீதத்தை அறியாத சிறுமி குருதத்தின் அறைக்கு செல்லவே., சிறுமியை பாலியல் சீண்டலிற்கு உட்படுத்தியுள்ளான். 

sexual harassment, sexual abuse, sexual torture,  rapped,

இவனது பிடியில் இருந்து தப்பிய சிறுமி அழுதுகொண்டே தனது தந்தையிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை குருதத்தின் சட்டையை பிடித்து சண்டையிட்டுள்ளார். 

இதனால் அதிர்ச்சியான தாளாளர் சிறுமியின் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டுவிடுமாறு கூறியுள்ளான். இந்த நிலையில்., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனை அறிந்து கொண்ட கொடூரன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடவே., இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in krishnagiri girl sexual torture by school manager police investigation going on


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->