கள்ளக்காதல் ஜோடியின் உல்லாசத்தை கண்டு கொண்ட மைத்துனருக்கு நேர்ந்த சோகம்.!! மோகத்தால் அரங்கேறிய கொடூரம்.!!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனபள்ளி பகுதியில் உள்ள கே.கொத்தூரை சார்ந்தவர் சங்கர். இவரது மனைவியின் பெயர் கலா (வயது 29). இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்ற நிலையில்., இவருக்கும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. 

சங்கர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில்., கலாவிற்கும் - பக்கத்து வீட்டை சார்ந்த புட்டப்பா (வயது 45) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில்., கடந்த 2012 ம் வருடத்தின் போது சங்கரின் தம்பியான சதீஷ்குமார் (வயது 8)., தனது அண்ணனின் இல்லத்திற்கு சென்றுள்ளார். 

இந்த சமயத்தில்., இவர்களின் உல்லாச வாழ்க்கையை கண்டுவிடவே., இது குறித்து யாரிடமும் சிறுவன் கூறிவிடுவான் என்ற எண்ணத்தில்., கள்ளகாதல் ஜோடி சிறுவனை கொலை செய்து அங்குள்ள பகுதியில் சாக்கில் கெட்டி பிணமாக போட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில்., இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளகாதல் ஜோடிகளுக்கு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலா மற்றும் புட்டப்பாக்கு ஆயுள் தண்டனையும்., ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனையை இவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in krishangiri illegal affair couple killed a child


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->