காவல் துறையினர் கைது செய்ததால் கள்ளக்காதல் ஜோடிகளின் விபரீத முடிவு..! இறுதியில் அரங்கேறிய பெரும் சோகம்..!!
in koyembedu bus stand illegal affair couple attempt suicide
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் பகுதியை சார்ந்தவர் குணசேகரன். இவரது மனைவியின் பெயர் கவிதாமணி (வயது 32). அங்குள்ள புளியம்பட்டி பகுதியை சார்ந்தவன் ஜெயக்குமார் (வயது 42). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் தனிமையில் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., இருவரும் கடந்த மாதம் 22 ஆம் தேதியன்று கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில்., சென்னைக்கு வந்துள்ளனர். தனது மனைவி வீட்டில் இல்லாததை அடுத்து., தேடி அலைந்த கவிதாமணியின் கணவர் குணசேகரன்., மனைவியை காணாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
அந்த விசாரணையில்., கள்ளக்காதல் ஜோடி சென்னையில் உள்ள நெற்குன்றம் பகுதியில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அறிந்த காவல் துறையினர் மற்றும் கவிதாமணியின் கணவர்., உறவினர்கள் சென்னைக்கு வந்த சமயத்தில்., கள்ளகாதல் ஜோடிகள் இருந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டில் ஜெயக்குமார் மட்டும் இருந்த நிலையில்., ஜெயக்குமாரை கைது செய்த காவல் துறையினர் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., கவிதாமணி சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சேலத்தில் இருந்து வரும் கவிதாமணியை அழைத்து வருமாறு ஜெயக்குமாரை அனுப்பி வைத்துள்ளனர். இவரையும் கோயம்பேடு பேருந்து நிறுத்த வளைவில் காவல் துறையினர் மறைந்திருந்து கண்காணித்துக்கொண்டு இருந்தனர்.
சேலம் பேருந்தில் இருந்து கவிதாமணி இறங்கியதும்., கவிதாமணி மற்றும் ஜெயக்குமாரை விசாரணைக்கு அழைத்து நம்பியூர் அழைத்து செல்ல காரில் ஏற்றினர். இந்த சமயத்தில்., யாரும் எதிர்பாராத நிலையில் கள்ளக்காதல் ஜோடிகள் தான் வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு மயங்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் உடனடியாக இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் காவல் துறையினர் கைது செய்யப்பட்ட பின்னர்., முன்னதாகவே முடிவெடுத்தார் போல் தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in koyembedu bus stand illegal affair couple attempt suicide