கணவன் - மனைவி பிரச்சனையை தீர்த்துவைக்க சென்று கொலைகாரராக மாறிய கோயம்பேடு பிச்சைக்காரர்..!!
in koyambedu bus stand begger killed a person on bus stand
சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் எந்த சமயத்திலும் பரபப்புடன் காணப்படும் பேருந்து நிலையமாகும். இங்குள்ள பகுதியில் பல்வேறு ஊரை சார்ந்த மற்றும் மாநிலங்களை சார்ந்த பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் அதிகளவில் உணவகங்களும் உள்ளது.
இதனைப்போன்று இங்குள்ள உணவத்தில் பல வருடமாக பணியாற்றி வருபவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட டேவிட். இவரது மனைவியின் பெயர் செல்வி. இவர்கள் இருவரும் உணவத்தில் பல வருடமாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் பணியாற்றி வரும் வருமானத்தில்., கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கியிருந்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்த சமயத்தில்., டேவிடிற்கு இருந்து மது பழக்கத்தின் காரணமாக மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனைப்போன்று இன்று காலை பணிக்கு செல்லாமல்., மது அருந்திவிட்டு டேவிட் வந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வழக்கம் போல வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில்., பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே செல்வியை டேவிட் அடித்துள்ளார்.
இந்த சமயத்தில்., சம்பவ இடத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த சிங்காரவேலு என்ற பிச்சைக்காரர்., இவர்களுக்குள் நடந்த பிரச்சனையை தீர்த்து வைக்க முடிவு செய்து., இருவரின் சண்டையில் தலையிட்டு மனைவியை அடிக்க பாய்ந்த., டேவிட்டை பிடித்து கீழே தள்ளியுள்ளார்.
இந்த தருணத்தில்., எதிர்பாராத விதமாக எதிரில் வந்த பேருந்தின் டயரில் சிக்கி டேவிட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள்., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., டேவிட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., சிங்காரவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in koyambedu bus stand begger killed a person on bus stand