கொடைரோட்டில் கொடூர விபத்து.. நேருக்கு நேர் மோதிய கார்.. உடல் நசுங்கி 4 பேர் பரிதாப பலி.!!
in Kodaikanal road car accident peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் பல்வேறு விபத்துகள் அரங்கேறி மக்கள் பரிதாபமாக பலியாகி வருகின்றனர். இவ்வாறான விபத்துகளில் பலர் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கொடைரோடு பகுதியில் இரண்டு கார்கள் எதிரெதிர் திசையில் வந்து கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில், கொடைரோடு பகுதியில் இரண்டு கார்களும் வேகத்துடன் வந்துள்ளது.
இந்த நேரத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர் திசையில் வந்த காரின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த அனைவரும் உயிருக்கு போராடி அலறித்துடித்தனர்.
இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் சக வாகனஓட்டிகள், இது தொடர்பாக காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்தியினருக்கு தகவல் தெரிவித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளனர், மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இரண்டு கார்களிலும் இருந்த நபர்கள் மற்றும் அவர்களின் இருப்பிடம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Kodaikanal road car accident peoples died