பணத்தை திரும்பி கேட்ட பெண்ணை விடுதிக்கு கடத்தி சென்று கொடூரமாக பலாத்காரம் செய்த கொடூரன்.!! வத்தலக்குண்டில் பயங்கரம்.!!
in kodaikanal girl rapped when giving loan and return money by friend
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் பகுதியில்., எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருபவன் 30 வயதுடைய சசிகுமார். அதே பகுதியில் இருக்கும் காம்ப்ளஸ் கடையில்., பணியாற்றி வருபவரின் பெயர் துர்கா (வயது 25) பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ரீதியிலான பழக்கம் ஏற்பட்டதை அடுத்து., சசிகுமாரிற்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் மல்லிகாவிடம் பணம் வாங்கியுள்ளார். சில நாட்களில் தந்து விடுவதாக கூறிய சசிகுமார்., பல முறை துர்கா கொடுத்த பணத்தை கேட்டும் திரும்ப தரவில்லை.
இந்த நிலையில்., கொடுத்த பணத்தை வாங்க வேண்டும் என்று சசிகுமாரின் கடைக்கு சென்ற சமயத்தில் அவனின் கடை அடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு தொடர்பு கொண்ட துர்கா., பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அவன்., தற்போது வத்தலக்குண்டில் இருப்பதாக கூறி., வத்தலகுண்டிற்கு வந்தால் உடனடியாக பணத்தை பெற்று கொள்ளுமாறும் கூறியுள்ளான். இதனை கேட்ட அவர்., பணம் வாங்கிவிட்டு வந்துவிடலாம் என்று வத்தலகுண்டிற்கு சென்றுள்ளார்.
அந்த நேரத்தில்., அவரை அங்குள்ள தனியார் விடுதிக்கு வரச்சொல்லி., விடுதியில் வைத்து மிரட்டி கற்பழித்து., அதனை காட்சிகளாக பதிவு செய்துள்ளான். மேலும்., இனி கொடுத்த கடனை கேட்டால் ஆபாச காட்சிகளை இணையத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளான்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து., கொடூரன் சசிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in kodaikanal girl rapped when giving loan and return money by friend