கரூர் 7 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில்., நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.!!
in karur sexual harassment case court order to jail
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). இவன் கைத்தறி நெசவாளனாக பணியாற்றி வருகிறான்.
கடந்த 2014 ஆம் வருடத்தில்., அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதி அதே பகுதியில் ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருந்தது. இந்த சிறுமியை கண்ட சுந்தரம் மிட்டாய் வாங்கித் தருவதாக அவனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுததை அடுத்து., இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து அங்குள்ள குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., சுந்தரத்தை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கு சம்பவம் தொடர்பான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய சுந்தரத்திற்கு சுமார் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்., ரூ.ஆயிரம் அபராதமும்., பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சுந்தரம் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
English Summary
in karur sexual harassment case court order to jail