தாயின் கள்ளகாதலால் மகளுக்கு நேர்ந்த சோகம்.!! கள்ளகாதலனின் கொடூர எண்ணத்தால் அரங்கேறிய கூட்டுப்பலியால் கொடுமையில் ஏற்பட்ட விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சூரை சார்ந்தவர் சங்கர் கணேஷ் (வயது 33). இவருக்கு திருமணம் முடிந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் அருகேயிருக்கும் தண்ணீர் பந்தல் பகுதியில் தங்கியிருந்து., வெல்டிங் பட்டறையில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார். 

அதே பகுதியில் சுமார் 40 வயதுடைய கணவரை பிரிந்த பெண் ஒருவர் தனது 13 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த நேரத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து கள்ளக்காதலாக மாறவே., இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மற்றும் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்த நேரத்தில் இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., சங்கரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும்., அவரது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு பணிக்கு சென்று வரும் வழக்கத்தை அந்த பெண் வைத்துள்ளார். 

இது குறித்து தனது மகளிடம் தாயார் கேட்ட சமயத்தில் அவரது மகள்., நீங்கள் பணிக்கு சென்ற சமயத்தில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்., சங்கர் கணேசனுடன் பணியாற்றி வந்த இரண்டு நபர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது.  

இதனை கேட்டு ஒருகணம் அதிர்ந்துபோன பெண்மணி., காவல் நிலையத்தில் சம்பவத்தை தெரிவித்து புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., சங்கர் கணேஷ் மற்றும் அவனுடன் பணியாற்றி வரும் அங்குள்ள வெள்ளகோவில் பகுதியை சார்ந்த முருகேசன் (வயது 50) மற்றும் குறுக்கு தெருவை சார்ந்த முருகேசன் (வயது 47) என்பதும் தெரியவந்தது. 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சங்கர் கணேஷை கைது செய்த நிலையில்., இந்த விவகாரத்தை அறிந்த முருகேசன் இருவரும் தலைமறைவாகினர். இவர்களை தீவிரமாக தேடி வரும் காவல் துறையினர்., இது குறித்த தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karur mental affected girl rapped by her mother illegal affair friend


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->