காரில் எரிந்து பலியான நபர் விவகாரத்தில் திடீர் திருப்பம்..! காவல் துறையினர் விசாரணையில் பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி அருகேயுள்ள குப்பம் - வேலம்பாளையம் செல்கிற சாலையில் நேற்று அதிகாலையில் காரொன்று எரிந்த நிலையில் நின்று கொண்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் செய்த சோதனையில்., காரின் பின் இருக்கை பகுதியில் ஆணின் உடல் எரிந்த நிலையில் இருந்துள்ளது. 

இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., காரில் பிணமாக இருந்தவர் நொய்யல் குறுக்கு சாலை பகுதியை சார்ந்த ரெங்கசாமி (வயது 51) என்பதும்., இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பழைய லாரியை புதுப்பித்து விற்பனை செய்யும் தொழிலையும் செய்து வந்த நிலையில்., காவல் துறையினர் ரெங்கசாமியின் இல்லத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

died, murder, killed, suicide attempt,

ரெங்கசாமியின் மனைவியான கவிதா (வயது 41) மற்றும் மகன் அஷ்வின் (வயது 19) ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின்னான முரண் தகவல்கள் வெளியாகவே., சந்தேகமடைந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில்., ரெங்கசாமிக்கும் - மற்றொரு பெண்ணிற்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில்., கவிதா மற்றும் அஸ்வின் ரங்கசாமியை இல்லத்தில் வைத்தே கொலை செய்துள்ளனர். 

பின்னர் காரில் உடலை ஏற்றிச்சென்று தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த காவல் துறையினர்., ரங்கசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். மேலும்., தந்தையை கொலை செய்த அஷ்வின் வாக்குமூலத்தில் கூறியதாவது., கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதல் வருடத்தில் பயின்று வருகிறேன். 

illegal affair, couple enjoy,

எனது தந்தைக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால்., தாய்க்கும் - தந்தைக்கும் இடையே சண்டை நடந்தது. மேலும்., கடந்த 4 ஆம் தேதியன்று கள்ளகாதலியின் இல்லத்தில் தந்தை உல்லசமாக இருந்ததை அறிந்து ஆத்திரமுற்ற நான் எனது தாயிடம் கூறினேன். எனது தந்தை மிகுந்த மனவேதனையுடன் பேசியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

பின்னர் கடந்த ஆறாம் தேதியன்று வீட்டிற்கு மது போதையில் வந்த சமயத்தில்., கள்ளக்காதல் தொடர்பாக கேள்வி எழுப்பியதை அடுத்து எனது தாயாரை அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் உடலை போரவையில் சுற்றி காரில் ஏற்றி., நள்ளிரவில் சென்று காரை தீ வைத்து எரித்துவிட்டு., நானும் - எனது தாயாரும் வந்துவிட்டோம் என்று கூறியுள்ளனர். இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karur husband killed by wife and son due to husband illegal affair


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->