மகனின் இறப்பு நெஞ்சை அடைக்க... ஊர் போற்றி வாழ்ந்த குடும்பத்திற்கு அரங்கேறிய பெரும் சோகம்.!!
in karur couple suicide
கரூர் மாவட்டத்தில் உள்ள சனப்பிரட்டி எழில் நகரை சார்ந்தவர் சேகர் (வயது 66). இவர் துணை வட்டார வளர்ச்சி அலுவகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் பணியின் போது நேர்மையாக இருந்த காரணத்தால் இவருக்கு அப்பகுதியில் நற்பெயரும் உண்டு. இவரது மனைவியின் பெயர் கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் சேர்ந்து மரக்கன்று நடுவது, கோவில் நிகழ்ச்சிகளில் உதவி செய்வது போன்ற சமூக பணிகளை சேர்ந்து செய்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் பாலச்சந்திரன் என்ற மகன் இருக்கிறார். பாலச்சந்திரன் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக காதல் தோல்வியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இவர்களின் ஒரே மகனையும் இழந்துவிட்டு தவிப்பதால் மனமுடைந்து தம்பதிகள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களிடம் உறவினர்கள் பலமுறை எடுத்து கூறியும், இவர்களால் மகனின் இறப்பில் இருந்து மீளவில்லை.
இதனால் இருவரும் மனமுடைந்தவாறே இருந்து வந்த நிலையில், தம்பதிகள் இருவரும் நேற்று அதிகாலை நேரத்தில் கரூர் - திண்டுக்கல் இரயில் பாதைக்கு முன்பு வந்துள்ளார். இந்த நேரத்தில் தண்டவாளத்தில் வந்த இரயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடலை கைப்பற்றினர்.
பின்னர் இது குறித்து இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த இரயில்வே துறையினர் இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், இருவரும் மகனின் தற்கொலையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil