தடையை மீறி போராட்டம்.. வெளுத்துக்கட்டிய காவல்துறை.. குமரியில் பரபரப்பு.!!
in Kanniyakumari youth congress members Batons by police
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் அருகே காங்கிரஸ் கட்சியினர் தண்டி யாத்திரையுடைய 90 ஆவது நாளினை சிறப்பிக்கும் பொருட்டு பாதையாத்திரை செல்ல முடிவு செய்துள்ளனர்.
இவர்களின் திட்டப்படி அங்குள்ள குளச்சல் முதல் இரணியல் வரை பாதையாத்திரை செல்ல இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இதற்கான அனுமதியை இவர்கள் காவல் துறையினரிடம் முறையாக வாங்கவில்லை.
இவர்கள் போராட்டம் துவங்கிய இடத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு, அனைவரும் கலைந்து செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி பாதையாத்திரைக்கு செல்ல முயற்சித்துள்ளனர்.
இவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் தர்ணாவில் ஈடுபட முயற்சித்த நிலையில், போராட்டக்குழு வன்முறையில் ஈடுபட முயற்சித்துள்ளது. இதனையடுத்து அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கிய காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு சூழல் நிலவியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Kanniyakumari youth congress members Batons by police