இளம்பெண் குளிப்பதை ரகசிய காமிராவில் பதிவு செய்த கொடூரம்.. இளம்பெண்ணை அடித்த காமுகன்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியை அடுத்துள்ள காட்டுப்புத்தூர் பகுதியை சார்ந்தவர் இளங்கோ என்கிற ஜீவா (வயது 22). இளங்கோவின் இல்லத்திற்கு அருகே இளம்பெண்ணொருவர் கணவருடன் வசித்து வந்துள்ளார். 

இவர் தினமும் இவரது இல்லத்திற்கு பின்புறம் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், கடந்த 26 ஆம் தேதியன்று வீட்டிற்கு வெளியே குளித்துக்கொண்டு இருந்துள்ளார். இந்த நேரத்தில் இவரின் வீட்டுபின்புற சுவர் வழியாக பொருள் மறைத்து வைத்துள்ளதாக கண்டுள்ளார். 

இதனையடுத்து அந்த பொருளை சோதனை செய்த நேரத்தில் அது ரகசிய காமிரா என்பது தெரியவந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, காமிராவை வைத்து வீடியோ எடுத்து யார் என்பதை கண்டுள்ளார். 

இந்த நேரத்தில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளங்கோ தன்னை இரகசிய காமிராவில் குளிப்பதை படமெடுத்தது தெரியவந்துள்ளது. இளங்கோவிடம் இது தொடர்பாக கேட்ட சமயத்தில் அவர் அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக இருக்கும் இளங்கோவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari youngster shoot illegal camera girl bath


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->