மனைவியிடம் ஆபாசமாக பேசிய நபரை., பெண் குரலில் பேசி புலந்து தள்ளிய கணவன்.! ஆசை தீர அடித்து நொறுக்கிய ருசிகரம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகில் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் பல விதமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு நடைபெறும் அநீதிகள் பெரும் கோபத்தையே நம்மிடையே வெளிப்படுத்துகிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய் தெரு பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவிக்கு பரிசாக அலைபேசியை வாங்கி வழங்கியுள்ளார். இவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் தினமும் ஆபாசமாக பேசி., குறுஞ்செய்தியும் அனுப்பி வந்துள்ளார். 

இந்த செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் மரியாதையாக பல முறை எச்சரித்தும்., திட்டியும் வந்த நிலையில்., இவரது பேச்சிற்கு எந்த விதமான செவியும் சாய்க்காது., அவதூறாக பேசி வந்துள்ளார். இந்த நிலையில்., இந்த செய்தியை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். 

இதனை அறிந்த கணவர் திட்டமிட்டு., மனைவியின் அலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டு., பெண் குரலில் பேசி வீட்டிற்கு வருமாறும் கூறியுள்ளார். இதனை கேட்ட மர்ம நபர்., நாம் பேசிய பெண்தான் அழைத்துள்ளார் என்று ஆவலில் கிளம்பி சென்றுள்ளார். 

இவரை பிடிக்க அங்குள்ள மக்கள் தயாராக காத்திருந்த நிலையில்., மர்ம நபர் வருகை தந்தவுடன் உடனடியாக அவனை பிடித்து அடித்து நொறுக்கினர். மர்ம நபரை ஆசை தீர அடித்து துவைத்த மக்கள்., பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வாலிபரிடம் மேற்கொண்ட விசாரணையில்., மர்ம நபரின் பெயர் ராம் பிரபு (வயது 35) என்பதும்., இவனின் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari man arrest when speech sexual harassment with another girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->