குமரியில் கரோனா வார்டில் அனுமதியான நபர் பலி.. மஹாராஷ்டிராவில் அடுத்த பலி...!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸிற்கு தற்போது வரை 471,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,283 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசால் உலக நாடுகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், தற்போது வரை 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 12 பேர் தற்போதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா சந்தேகத்துடன் மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதியாகியிருந்த நபர் உயிரிழந்துள்ளார். இவருக்கு கரோனா அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறிய, அவரின் இரத்த மாதிரிகளை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைப்போன்று தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததை அடுத்து, பலியான நபரின் எண்ணிக்கை மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்காக உயர்ந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari man admit hospital and died maharastra increase death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->