பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய காம கொடூர ஆசிரியன்.! கன்னியாகுமரியில் பரபரப்பு.!!
in kanniyakumari girl student sexual harassment by teacher
இவ்வுலகத்தில் பல விதமான பிரச்சனைகள் நடந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் பிரச்சனைகளில் பெரும் பிரச்சனையாக பெண்களுக்கு நடக்கும் கொடூரங்கள் இருந்து வருகிறது. நமது நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் மாற்றப்படும் பட்சத்திலேயே இதனை தவிர்க்க இயலும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகேயுள்ள கல்பாறைபொட்டாற்றை அருகேயுள்ள பகுதியில் தனியார் உயர்நிலைப்பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவனின் பெயர் டேவிட் ராஜ். இவன் அடிக்கடி பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் செயலை செய்து கொண்டு வந்துள்ளான்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவிகள் இது குறித்து புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில்., கடந்த வெள்ளிக்கிழமையன்றும் காம கொடூரன் மூன்று மாணவிகளிடம் அத்துமீறியுள்ளான். இதனால் கடும் துயருக்கு உள்ளான மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் இது குறித்து கூறி கதறியழுத்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று நிர்வாகத்தரிடம் புகார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் அதிரடியாக விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் என்ற பெயரில் காம கொடூரனாக இருந்து வந்தது தெரியவந்தது.
இதற்குப்பின் காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே வைத்து புகார்களை பெற்று வழக்குப்பதிவு செய்த நிலையில்., காம கொடூர ஆசிரியனை கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இவர்களின் விசாரணைக்கு பின்னர் மகளீர் காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு., போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanniyakumari girl student sexual harassment by teacher