சிறுமியை ஊர் ஊராக கடத்தி சென்று கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த காம கொடூரன்கள்.! விசாரணையில் கொடூரன்கள் கூறிய அதிர்ச்சி தகவல்.!!
in kanniyakumari girl sexual harassment by drama love gang police investigation going on
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் பெரும்பாலானவை பெண்களுக்கு தெரிந்த நபர்களாலேயே வழங்கப்படும் செய்தியானது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தில் இருக்கும் பகுதியை சார்ந்த 15 வயதுடைய சிறுமி கடந்த 13 ஆம் தேதியன்று மாயமாகியுள்ளார். இவரை காணாது தேடி அலைந்த பெற்றோர்., எங்கு தேடியும் சிறுமி காணவில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டும் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத நிலையில்., அங்குள்ள குறும்பனையை பகுதியை சார்ந்த சுஜின் என்ற நாடக காதல் காம கொடூரன் சிறுமியை அவரது ஊரில் வந்து விட்டுவிட்டு எந்த விதமான சலனமும் இன்றி சென்றுள்ளார்.
சிறுமி வீட்டிற்கு சென்றதும் சிறுமியிடம் விசாரித்த பெற்றோர்கள் சிறுமி கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கு பின்னர் சுஜினை கைது செய்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுஜின் மற்றும் அனைத்து நண்பன் ஷாம் பின்டோ சேர்ந்து சிறுமியை வேளாங்கண்ணிக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதற்க்கு பின்னர் மாணவியை அழைத்து கொண்டு கொல்கத்தா சென்ற நிலையில்., இவர்களிடம் இருந்த பணமெல்லாம் தீர்ந்துள்ளது.
இதனையடுத்து அங்கிருந்து இரயில் மூலம் தமிழகத்திக்கு வந்த கொடூரன்கள் சிறுமியை அவரது ஊரில் அழைத்து வந்து விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து இருவரையும் அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல் துறையினர் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவமானது அங்குள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in kanniyakumari girl sexual harassment by drama love gang police investigation going on