அக்கா வீட்டிற்கு வந்த மச்சினிச்சியை மசக்கையாக்கிய மாமன்.! இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி.!!
in kanniyakumari girl rapped by her sister husband
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தையை அடுத்துள்ள குருந்தன்கோடு காலனியை சார்ந்தவர் ஐயப்பன் (வயது 27). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஐயப்பனுக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ள நிலையில்., அவரது மனைவிக்கு 16 வயதுடைய தங்கை ஒருவர் இருக்கிறார்.
அவரது தங்கை தனது அக்காவை காணுவதற்கு அக்கா வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நேரத்தில்., ஐயப்பனும் தனது மனைவியின் தங்கை என்று பழகி வந்த நிலையில்., கடந்த சில வாரங்களாக தனது அக்காவின் வீட்டிற்கு அவர் வருவது மறுத்துவிட்டார். இதற்கு ஏன் எனது வீட்டிற்கு வரவில்லை என்று அக்காவும் கேள்வி கேட்கவே ஏதும் கூறாமல் மறுத்து வந்த நிலையில்., திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தாயார்., சிறுமியின் உடல் நலம் குறித்து கூறி பரிசோதனை செய்யச் சொல்ல நிலையில்., சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடையவே இதற்கு காரணம் யார்? என்று சிறுமியிடம் விசாரித்துள்ளார்.
இது குறித்து அவர் எதுவும் கூற மறுத்ததால்., இதுகுறித்து அங்குள்ள குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்ட நிலையில்., சிறுமி தனது அக்கா வீட்டுக்கு சென்று வரும் சமயத்தில் அக்காவின் கணவர் சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஐயப்பனை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in kanniyakumari girl rapped by her sister husband