சொந்த பேத்தியை சீரழித்த தாத்தாவிற்கு., நாகர்கோவில் நீதிபதியின் அதிரடி தீர்ப்பு..!!
in kanniyakumari girl rapped by her grand fa court order jail
நாம் வாழும் உலகில் பல விதமான பிரச்சனைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்., நம்மை பெரும் பிரச்சனைக்கும்., கோபத்திற்கும் உள்ளாக்குவது பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் ஆகும். பெண் குழந்தைகளில் இருந்து வயதான பெண்கள் வரை நடைபெறும் கொடூரங்களை குறைப்பதற்கு சட்டங்கள் இன்னும் கடுமையாக வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னமுட்டம் துறைமுகம் சாலை பகுதியை சார்ந்தவன் இருதய தாசன் (வயது 58). இவனுடைய மகனின் மகளிர்க்கு 8 வயதாகிறது. இவனின் மகனுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை அங்குள்ள மணக்குடி கிராமத்தில் இருக்கும் உறவினரின் இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்த சமயத்தில்., எட்டு வயதாகும் சிறுமியை தனிமையில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். குழந்தை அழுதுகொண்டே தாத்தாவின் கொடூர செயலை பெற்றோரிடம் தெரிவிக்கவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததை அடுத்து., வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் இருதய ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விஷயம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இன்று மீண்டும் நாகர்கோவில் நீதிபதிகளின் முன்னைலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் 10 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
Tamil online news Today News in Tamil
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...
English Summary
in kanniyakumari girl rapped by her grand fa court order jail