சிறுமியை தென்னந்தோப்பிற்கு கடத்தி சென்று கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த கொடூரம்.! விசாரணையில் வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!   - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே நடைபெற்று வருகிறது. பெண்களிடம் அத்துமீறும் கொடூரன்களுக்கு தக்க சரியான தண்டனை விதித்து வந்தால் மட்டுமே பெண்களிடம் அத்துமீறும் செயலானது குறைந்து வரும். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென்தாமரைக்குளம் பகுதியை சார்ந்த சிறுமி சுசீந்திரத்தில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பள்ளிக்கு சென்று வரும் சம்யத்தில்., அதே பகுதியை சார்ந்த ஹரிஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

kanniyakumar, kanniyakumari railway station

இந்த நிலையில்., காதலர்களுக்குள் வழக்கம்போல ஏதோ பிரச்சனை உருவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் சிறுமிக்கு தொடர்பு கொள்வதை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து காதலனுக்கு தொடர்பு கொண்ட சிறுமி உன்னை நான் காண வேண்டும்., வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வந்துவிடு., இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார். 

இந்த சமயத்தில்., இவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சிறுமி காத்துகொண்டு இருக்கவே., இந்த நேரத்தில் காதலன் வருவதற்கு சிறிது காலதாமதமாகியுள்ளது. இந்த நிலையில்., அங்குள்ள ஆண்டிவிளை பகுதியை சார்ந்த அபிஷேக் (வயது 19) மற்றும் சகாய ஜானு (வயது 21) என்ற இரு காம கொடூரன்கள் சிறுமியை துரத்தவே., அதிர்ச்சியடைந்த சிறுமி சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். 

இவர்களின் துரத்தல் வேட்டையில் சிக்கிய சிறுமியை அங்குள்ள தென்னந்தோப்பு பகுதியில் வைத்து இருவரும் கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த நிலையில்., சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு காதலனும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளான். இவனை கண்ட கொடூர கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிஉள்ளான்கள். 

sexual harassment, sexual abuse

இதனையடுத்து தனது இல்லத்திற்கு சென்று தனக்கு நடந்ததை கூறி சிறுமி கதறியளவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிலையில்., சிறுமியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று கூறி புகாரை ஏற்க மறுத்துள்ளனர். 

இதனையடுத்து மாவட்ட உளவுத்துறை காவல் ஆணையர் அலுவகத்திற்கு சென்று விஷயத்தை கூறி புகார் அளித்துளளார். இதனை ஏற்ற உளவுத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து., சுமார் இரண்டு மணிநேரத்திற்குள்ளாகவே காம கொடூரன்களை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவமானது அங்குள்ள பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari girl rapped by gang police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->