காதலியின் புகைப்படத்தை வெறித்தனத்தால் காதலன் செய்த காரியம்.! பதறிப்போன பெண் செய்த சம்பவத்தால் கதறும் காதலன்.!!
in kanniyakumari girl photo miss beehive by her lover
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியை அடுத்துள்ள குறத்தியரை பகுதியை சார்ந்தவர் நவீன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்று வருகிறார். இவரது ஆட்டோவில் அப்பகுதியை சார்ந்த இளம் பெண் ஒருவர் தினமும் பயணிப்பது வழக்கம்.
அந்த வகையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களின் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நேரத்தில் நவீனின் குடும்பத்தில் ஏற்பட்ட சூழ்நிலையின் காரணமாக வெளிநாட்டிற்கு பணிக்காக சென்றுள்ளார். இந்த நேரத்தில் வேறொரு ஆணுடன் பழக்கம் கிடைத்ததை அடுத்து அந்த பெண் அவருடன் பழகி வந்துள்ளார்.
வெளிநாட்டில் பணியை நிறைவு செய்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிய நவீனிற்கு., தனது காதலி வேறொரு ஆணுடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நவீன்., தனது காதலியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நவீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in kanniyakumari girl photo miss beehive by her lover