பள்ளி மாணவியை முகநூல் காதலில் விழவைத்து கூட்டுப்பலியால் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொடூரம்.!! இறுதியில் அரங்கேறிய துயரம்.!!
IN KANNIYAKUMARI GIRL GANG RAPPED BY FACEBOOK LOVE
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆவாரைக்குளத்தை சார்ந்தவர் ஏசுனேஷன். நாகர்கோவில் நகரில் உள்ள பகுதியில் கல்லூரி மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே முகநூலின் மூலமாக அறிமுகம் கிடைத்ததை அடுத்து., இவர்கள் நட்பு வட்டாரத்துடன் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில்., இவர்கள் இருவரும் தங்களின் புகைப்படங்களை பகிரும் அளவிற்கு நண்பர்களாகியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில்., ஏசுனேஷன் மாணவியை காதலிப்பதாக கூறியதை அடுத்து., மாணவி செய்வதறியாது திகைக்கவே பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில்., மாணவியை நேரில் காண வேண்டும் என்று ஏசுனேஷன் கூறியுள்ளார்.
இதனை ஏற்ற மாணவி அங்குள்ள ஆற்றங்கரை அருகே சென்று சந்தித்த சமயத்தில்., அவரை அங்குள்ள பள்ளிவாசல் அருகேயிருக்கும் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த நேரத்தில்., விடுதியறைக்குள் ஏசுனேஷனின் நண்பர் இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்துள்ளார்.
இது குறித்து ஏசுனேஷனிடம் கேட்க முயற்சித்த சமயத்தில் மாணவியை இருவரும் சேர்த்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியை பலாத்காரம் செய்து அவரின் இல்லத்திற்கு அருகில் கொண்டு சென்று., இது குறித்து யாரிடமும் கூற கூடாதென்று கூறியுள்ளனர்.
இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியத்தில் உடலளவில் மாணவி பாதிக்கப்பட்டு இருந்த நிலையில்., வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
IN KANNIYAKUMARI GIRL GANG RAPPED BY FACEBOOK LOVE