8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுக பாதிரியார்.. காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.!!
in kanniyakumari church father sexual torture 8 year old child
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறையை சார்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் மதபோதராக இருந்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் அருகேயுள்ள வடக்கன்குளம் அன்புநகர் பகுதியில் கடந்த 20 வருடமாக ஜெபக்கூட்டத்தினை நடத்தி வருகிறார்.
ஜெபக்கூட்டத்திற்கு இப்பகுதியை சார்ந்த பலரும் குடும்பத்துடன் வந்து செல்லும் நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் ஜெபக்கூட்டத்தில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த தம்பதிக்கு 8 வயது பெண் குழந்தை உள்ள நிலையில், குழந்தையும் ஜெபக்கூட்டத்திற்கு வந்து சென்றுள்ளது. இந்த நிலையில், சிறுமிக்கு பாதிரியார் செல்வராஜ் பாலியல் தொல்லை வழங்கி வந்துள்ளான். இதேபோன்று கடந்த 23 ஆம் தேதியும் சிறுமியிடம் அத்துமீறியுள்ளான்.
இதனையடுத்து சிறுமி இது தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, தகவலை அறிந்ததும் இது தொடர்பான வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணைக்கு பின்னர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanniyakumari church father sexual torture 8 year old child