8 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வயோதிகன்... நொறுக்கியெடுத்த பொதுமக்கள்..!!
in kanniyakumari child sexual torture by aged man
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு கலிங்கராஜபுரம் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 53). இவர் கூலித்தொழிலாளியாக இருந்து வரும் நிலையில், அப்பகுதியில் மரமேறும் தொழிலை செய்து வந்துள்ளார்.
இவரது வீட்டிற்கு அருகேயே 8 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியிடம் அவ்வப்போது ஸ்ரீதரன் பேசி வந்துள்ளார்.
சிறுமியின் குடும்பத்தினருடனும் ஸ்ரீதரன் பேசி வந்த காரணத்தால் பெற்றோர்களும் கண்டுகொள்ளாது இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டு இருந்த சூழலில், ஸ்ரீதரன் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து தனது இல்லத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனால் செய்வதறியாது திகைத்த சிறுமி அழுதுகொண்டே தனது இல்லத்திற்கு வந்துள்ளார். குழந்தையின் அழுகைக்கான காரணத்தை கேட்டறிந்து பெற்றோர்கள் அதிர்ச்சியாகவே, பின்னர் இது தொடர்பாக உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஸ்ரீதரனை பிடித்து பொதுமக்கள் அடித்து நொறுக்கிய பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanniyakumari child sexual torture by aged man