16 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய 16 வயது சிறுவன்.. நாடகக்காதல் உச்சக்கட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட 16 வயது சிறுமிக்கும், இதே பகுதியை சார்ந்த 16 வயது சிறுவனிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த சமயத்தில், சிறுவன் தனது வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதனையே மீண்டும் கூறி கொலை செய்து விடுவதாக மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். 

இந்த விஷயம் தொடர்பான தகவல் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் அங்குள்ள நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari child girl sexual abuse by drama lover


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->