வெயிலால் வீட்டுக்கதவை திறந்து வைத்த பாட்டி.. உள்ளே நுழைந்த கொடூரன்.. அரங்கேறிய பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலம் பகுதியை சார்ந்தவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலையின் போது வழக்கம்போல பணிக்கு சென்றுள்ளார். 

இவருடைய மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்த நிலையில், பகல் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்ததால், வீட்டின் முன் கதவினை பூட்டாது திறந்து வைத்து இருந்துள்ளார். 

இந்த நேரத்தில், சுமார் 30 வயதுடைய வாலிபன் வருகை தந்து, அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததை கண்டு நோட்டமிட்டு, பெண்ணின் இல்லத்தில் அத்துமீறி நுழைந்துள்ளான். 

இவனை கண்டு பெண் செய்வதறியாது அதிர்ச்சியடைவே, பெண் சுதாரிப்பதற்குள் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து சுதாரித்த பெண்மணி கூச்சலிடவே, இவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளார். 

இதனை கண்ட காமுகன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடவே, காமுகனின் கொடூரத்தால் பெண்ணிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக அங்குள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

பின்னர் இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய வாலிபனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari aged lady rapped by youngster


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->