தாயின் கள்ளக்காதல் மோகத்தால் துடிதுடித்த எட்டு வயது சிறுமி.! கள்ளகாதலனின் கொடூரத்தால் நேர்ந்த சோகம்.!!
in kanniyakuamri girl rapped by her mothers illegal affair
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இராமன்துறையை சார்ந்த பெண்மணி., அதே பகுதியில் தங்கி பணியாற்றி வந்த வடநாட்டு இளைஞருடன் நட்பு வட்டாரத்தில் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதலை அடுத்து., இவர்கள் இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வடநாட்டு இளைஞர் சென்றுவிடவே., இவர்கள் இருவரும் தனியே வசித்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் உதவிக்காக ரெபின் என்ற இளைஞர் இருந்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில்., இவர்களின் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டில் குடிவந்த ரெபின் - கணவனை இழந்து வந்த பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசம் நடத்தி வந்துள்ளனர். இந்த நேரத்தில் அந்த பெண் தேங்காய்பட்டினம் அருகேயுள்ள பகுதியில் வீடு எடுத்து வாடகைக்கு குடிவந்து இருந்துள்ளார்.
ரெபின் அங்குள்ள துறைமுகத்தில் இரவு பணிக்கு சென்று வரும் நிலையில்., அந்த பெண் பகலில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்த நேரத்தில்., அந்த பெண்ணின் எட்டு வயதுடைய மகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்று வந்த நிலையில்., கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தாயார் பணிக்கு சென்றுவிட்ட நிலையில்., சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான்.
இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்கவே., அவர் அதனை கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில்., நேற்று முன்தினம் உறங்கிக்கொண்டு இருந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து தனது தாயாரிடம் நடந்ததை கூறி கதறியளவே., அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கவே., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் தப்பியோடிய ரெபினை கைது செய்தனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை அங்குள்ள பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in kanniyakuamri girl rapped by her mothers illegal affair