தனிமையில் வசித்து உறவுகளை வெறுத்த தாய் - மகளின் விபரீத முடிவு.. கதறித்துடித்த மகன்..!! காஞ்சியில் பெரும் சோகம்.!!
in kanchipuram mother and daughter suicide feeling alone
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.எம் நகர் பகுதியை சார்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவியின் பெயர் சீதா (வயது 60). இவர்களது மகளின் பெயர் தனலட்சுமி (வயது 35) மற்றும் மகனின் பெயர் பாலாஜி (வயது 28).
கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக சீனிவாசன் இயற்கையை எய்திய நிலையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாலாஜி தனியாக வசித்து வந்துள்ளார். சீதா மற்றும் அவரது மகள் தனலட்சுமி தனியாக வசித்து வந்துள்ளனர்.
தாய் மற்றும் மகள் தனிமையில் வசித்து வந்த காரணத்தால் இருவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுமட்டுமல்லாது இவர்கள் இருவரும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் பழகாமல், பேசாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நேரத்தில், பாலாஜி தனது தாய் மற்றும் சகோதரியை பார்க்க முடிவு செய்து, நேற்று முன்தினத்தின் போது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் கதவானது உள்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும், நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை.
இதனையடுத்து பெரும் சந்தேகத்திற்கு உள்ளான பாலாஜி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
கதவை உடைத்து உள்ளே செல்கையில், தாய் - மகள் இருவருமே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பாலாஜி கதறியளவே, காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanchipuram mother and daughter suicide feeling alone