ஓசி சோறு... டிப் டாப் உடையோடு பயங்கர மிரட்டல்..! கோவக்கார கடைக்காரரின் சிறப்பான சம்பவம்.!!
in kanchipuram hotel free food culprit fight with hotel owner
காஞ்சிபுரம் நகரில் உள்ள அத்திவரதர் கோவிலுக்கு அருகேயிருக்கும் உணவகத்தில் பெரிய அதிகாரி போல உடையணிந்த நபரொருவர் தன்னுடன் 4 பேரை அளித்து வந்துள்ளார். இந்த உணவகத்தில் அனைவரும் தங்களுக்கு தேவையானதை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
பின்னர் தான் நகராட்சி ஆய்வாளர் என்று கூறியும்., 5 சாப்பாட்டிற்கு காசு ஏதும் கொடுக்க வேண்டுமா? என்று கூறியுள்ளார். இவரின் பேச்சில் உள்ள பாணியால் ஆத்திரமடைந்த உணவகத்தின் உரிமையாளர் யாராக இருந்தாலும் காசு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அதிகாரி போல இருந்த நபர் கடை சுத்தமாக இல்லை., பிளாஸ்டிக்கை உபயோகம் செய்து வருகிறீர்கள் என்று குற்றம் சுமதி மிரட்டியுள்ளார். இவர்களின் பேச்சிற்கு அசாதார கடையின் உரிமையாளர் கடையின் உரிமத்தை புதுப்பித்து தர வாங்கிய ரூ.5 ஆயிரத்தை கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அதிகாரி., தான் தற்போது அதிகாரியாக இல்லை என்றும்., கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக அதிகாரியாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடையின் உரிமையாளர் கடும் உக்கிரத்துடன் இருந்ததால் வேறு வழியின்றி 5 பேரும் சாப்பிட்ட சாப்பாடுக்கு பணம் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். மேலும்., சம்பவ இடத்தில் பணத்தை கொடுத்துவிட்டு இன்னும் சில தினத்தில் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மிரட்டலும் விடுத்து சென்றுள்ளது. இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanchipuram hotel free food culprit fight with hotel owner