காஞ்சிபுரம் பெண் நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம்.! வெளியான தகவல்.!!
in kanchipuram girl killed case police investigation
காஞ்சிபுரத்தை அடுத்துள்ள காவிதண்டலம் பகுதியை சார்ந்தவர் ஜெயபால். இவரது மனைவியின் பெயர் கோமதி (வயது 32). இவர்கள் தங்களின் இல்லத்தில் மாடுகளை வளர்ந்து வரும் நிலையில்., மாடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள பகுதியில் காலை மற்றும் மாலை நேரத்தில் கோமதி அழைத்து சென்று., பின்னர் மீண்டும் வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில்., கடந்த 5 ஆம் தேதியன்று மாடுகளை மேய்க்க சென்ற கோமதி., இரவு 9 மணியாகும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்துள்ளார். இவரை காணாது அதிர்ச்சியடைந்த ஜெயபால்., அக்கம் பக்கத்தினரிடம் கூறிவிட்டு., உறவினர்களுடன் மனைவியை தேட துவங்கினர். இந்த சமயத்தில்., அங்குள்ள ஏரி கால்வாய் பகுதியில் நிர்வானமாக கழுத்தறுக்கப்ட்ட பெண் சடலம் ஒன்று இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள்., காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னர் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் கோமதி என்பது., இவரை காணாது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த காவல் துறையினர் ஜெயபால் மற்றும் அவரது அண்ணன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும்., கோமதியின் கொலைக்கு காரணம் சொத்து தகராறாரா? தொழில் போட்டியா? முறையற்ற பழக்கம் யாரெனுக்கும் இருந்ததா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும்., கொலையாளியை விரைவில் கைது செய்வோம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
in kanchipuram girl killed case police investigation