அண்ணனின் வருகையை கண்டு துள்ளிக்குதித்து வந்த 2 வயது குழந்தை..! துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்.. காஞ்சியில் சோகம்.!!
in kanchipuram 2 year child unfortunately died school vehicle hit
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அருகேயுள்ள பெருநகர் நியூ காலனி பகுதியை சார்ந்தவர் அருணகிரி. இவருக்கு திருமணம் முடிந்து புனிதன் என்ற 4 வயதுடைய மகனும், பொன்மதி என்ற 2 வயதுடைய மகளும் உள்ளனர்.
புனிதன் அங்குள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி பயின்று வரும் நிலையில், குழந்தை தினமும் பள்ளிக்கு சென்று வருவதற்கு பள்ளி பேருந்தை உபயோகம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற குழந்தை, மாலை நேரத்தில் மீண்டும் பள்ளி பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்த பேருந்தை இப்பகுதியை சார்ந்த சிவசங்கர் (வயது 28) என்பவர் இயக்கி வந்த நிலையில், சிறுவனை வீட்டீர்கள் இறக்கிவிட்டு வாகனத்தை ஓட்டுநர் இயக்கியுள்ளார். இந்த சமயத்தில், வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த புனிதனின் தங்கை பேருந்துக்கு அருகே வந்துள்ளார்.
பேருந்தின் கீழ்புறம் உள்ள சக்கரத்துக்கு அடியில் குழந்தை பொன்மதி இருந்த நிலையில், இதனை அறியாத ஓட்டுநர் பேருந்தை இயக்கவே, சக்கரம் ஏறி குழந்தை படுகாயத்துடன் அலறி துடித்துள்ளார்.
குழந்தையின் அபய அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை இறந்த செய்தியை அறிந்த பெற்றோர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanchipuram 2 year child unfortunately died school vehicle hit