திருடனுக்கே டிமிக்கி கொடுத்த கள்ளக்குறிச்சி ஏடிஎம்.. விசாரணையில் காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரில் கடந்த 7 வருடமாக பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமாக இருக்கும் ஏடிஎம் இயந்திரமானது செயல்பட்டு வருகிறது. 

பணிக்கு செல்ல மனமில்லாத சில உள்ளங்கள் திருடுவதை பிழைப்பாக கொண்டு செயல்பட்டு வரும் நிலையில்., இங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் எடுத்து பணக்காரன் ஆகிவிட முடிவு செய்துள்ளனர். 

திருக்கோவிலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியானது மார்க்கெட் வீதியில் செயல்பட்டு வருவதால் பகலில் திருட வாய்ப்பில்லை என்பதால்., இரவில் ஏடிஎம் மையத்தை கொள்ளையிட கொள்ளையர்கள் திட்டமிட்டுள்ளனர். 

ATM Machine,

இதன்படி அனுபவம் நிறைந்த கொள்ளையர்களை போல ஏடிஎம் மையத்தில் இருக்கும் கண்காணிப்பு காமிராவில் ஸ்ப்ரே அடித்து ஏடிஎம் இயந்திரத்தின் மேல் பகுதியை உடைத்த நிலையில்., கீழே பணம் இருக்கும் பெட்டியினை உடைக்க இயலவில்லை. 

இதனால் கடுமையான ஏமாற்றத்திற்கு உள்ளான கொள்ளை கும்பல் திரும்பி சென்ற நிலையில்., இதனைப்போன்று அங்குள்ள மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தையும் உடைக்க முயற்சி செய்தது தோல்வியை தழுவியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kallakurichi atm machine robbery police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->