கரும்பு தோட்டத்தில் அரங்கேறிய கொடூரம்.! 100 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த கும்பல்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு மற்றும் அவனது நண்பர்கள் சேர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களை காதல் வலையில் விழவைத்து., பாலியல் பலாத்காரம் செய்து., அலைபேசியில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  
இந்த நிலையில்., இதனைப்போன்ற துயர சம்பவமானது கள்ளக்குறிச்சியில் நடந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வந்த மாணவிக்கு கொடூர கும்பல் ஒன்று வலைவிரித்துள்ளது. அந்த கொடூர கும்பலை சார்ந்த கொடூரன் ராஜா., வேலுமணி என்ற கொடூரர்கள் மேற்கூறிய மாணவியை சாலையில் நடந்து செல்லும் சமயத்தில்., ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்துள்ளனர். படிப்பிற்க்காக பயந்த மாணவி வீட்டில் இது குறித்து கூறாமல் இருந்துள்ளார். 

ஒரு சமயத்திற்கு மேல் ஆத்திரமடைந்து இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே., காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜா மற்றும் வேலுமணியை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டதில்., பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அந்த விசாரணையில்., 

ராஜா மற்றும் வேலுமணியை தொடர்ந்து மொத்தமாக நால்வர் சேர்ந்த கொடூர காம கும்பலானது இந்த கொடூரத்தை அரங்கேற்றி வந்துள்ளது. இவர்களின் திட்டப்படி பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளை தேர்ந்தெடுத்து சீரழித்தது தெரியவந்தது. இந்த நிலையில்., அங்குள்ள கரும்புத்தோட்ட பகுதிகளுக்கு காதல் ஜோடிகள் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அவ்வாறு அங்கு வரும் காதல் ஜோடிகளை மறைந்திருந்து வீடியோ பதிவு செய்து., ராஜா தன்னை காவல் அதிகாரியாக பாவித்து பெண்களை மிரட்டி., மிரட்டலுக்கு  பயந்துபோகும் பெண்களை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி விடியோவாக பதிவு செய்த கொடூரமும் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில்., கைதான நபர்களிடம் சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகள் கைப்பற்றப்பட்ட நிலையில்., இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kallakurichi 100 plus girls rapped by a gang


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->