பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் அடிதடி, கத்திக்குத்து.. காஞ்சிபுரத்தில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடியான ஸ்ரீதர் மறைந்த பின்னர், அவரது கூட்டாளிகளுக்குள் அடுத்து காஞ்சிபுரம் ரவுடி யார்? என்ற சண்டை நடைபெற்று வந்தது. இந்த சண்டையில் பல கொலைகள் பட்டப்பகலில் சினிமா பாணியில் அரங்கேறியது. 

இந்த நிலையில், காஞ்சிபுரம் நகர் பகுதியில் ஸ்ரீதரின் கூட்டாளியான தணிகாவின் கூட்டாளிகள் பட்டாக்கத்தியுடன் சென்று 7 பேரை குத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுமட்டுமல்லாது ரவுடி தியாகுவுடைய வீட்டில் இருக்கும் கார் போன்றவை அடுத்து நொறுக்கப்பட்டு, இரண்டு சக்கரவ வாகனங்கள் இரண்டு மற்றும் 4 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு சென்றது. 

இவர்களை கைது செய்வதற்கு தற்போது 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 6 தனிப்படை அமைக்கப்பட்டு ஸ்ரீதரின் ஓட்டுநர் தினேஷ் மற்றும் மைத்துனர் தணிகா, தியாகு கூட்டாளி 56 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

இந்த நேரத்தில், ரவுடி தணிகாவின் கூட்டாளிகள் அடிதடியில் ஈடுபட்டு, பட்டாக்கத்தியுடன் அலையும் சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் காஞ்சிபுரம் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kachipuram rowdy tanika supporters fight with other gang


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->